சில காணொளிகளை காண நேர்ந்தது, சில கூத்தாடிக் கோமாளிகள் தான் ஆகச் சிறந்த அறிவாளி, பொதுவுடைமைச் சிந்தனாவாதி என்று காட்டிக் கொள்ள இரஷ்ய எழுத்தாளர்களையும் , கியூபப் போராளிகளையும் பற்றி மட்டுமே அரற்றி இருந்தனர், திருவள்ளுவனைத் தாண்டிய ஒரு பொதுவுடைமைவாதியும் இல்லை ஆனால் ஏனோ ஏமாற்றித் திரியும் கூட்டம் கார்ல் மார்கஸையும், சேக்களையும், காஸ்ட்ரோக்களையுமே துணைக்கு அழைக்கிறது. இதுபோன்ற காணொளிகளை காணும் விசிலடிச்சான் குஞ்சுகள் தன் பொதுவுடைமையை மேலுக்கு போடும் சட்டையோடு நிறுத்திக் கொள்கின் றன. ஒருவனும் திரும்பக் கேட்பதில்லை அவன் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் அவனது செயலும் அவன் பேசும் சித்தாந்தக்களுக்கு தொடர்புள்ளதா என்று. என் பார்வையில் பொதுவுடமை என்பது படித்து வருவதில்லை அவரவர் சூழ்நிலையில் தன்னைச் சார்ந்த சமூகம் சுரண்டப்படும் போதும், ஒடுக்கப்படும்போதும் ஒருவருக்கு அது தவறாய்த் தெரியுமானால் அவர் பொதுவுடைமைவாதியே... அதற்கு எதிராய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும் போராளியே. கடின சித்தாந்தங்களைப் பேசி இன்னும் 50 வருடங்கள் காத்திருக்க வைக்காதீர்